கொழும்புப் பணத்தால் விக்னேஸ்வரனை அவமானப்படுத்திய பரஞ்சோதி.


வடக்கு மாகாணசபையின் ஆளுங்கட்சி உறுப்பினர்கள் தமக்கிடையே மோதிக் கொண்டதால் சபை நடவடிக்கைகள் நேற்று பாதிப்படைந்தன. நீண்ட நாட்கள் நிலவி வந்த பனிப்போர் நேற்றைய தினம் கடுமையாகியதாலேயே சபை நடவ டிக்கைகள் பாதிப்படைந்தன.
முதலமைச்சர் தலைமையில் அவைத் தலைவர் தலைமையில் ஒரு அணியும் என பிரிந்த இரு அணிகளும் நேற்று மோதிக் கொண் டன.
இதனை எதிக்கட்சியினர் அமைதியாக இருந்து பார்த்து இரசித்ததையும் காணக்கூடியதாக இருந்தது.
வடக்கு மாகாணசபையின் மாதாந்த கூட்டத் தொடர் நேற்று நடைபெற்றது அதன் போது முதலாவதாக பட்டதாரிகள் பிரச்சினை யும் அடுத்து முதலமைச்சருக்கு எதிரான உறுப்பினர் பரஞ்சோதியின் கேள்விகளும் எடுத்துக் கொள்ளப்பட்டன.
இதனால் இது வரை காலமும் நிலவி வந்த பணிப்போர் நேற்றைய தினம் முட்டி மோதி வெடித்து கலோபரமானது.
மாகாணசபை உறுப்பினர் சுகிர்தன், பட்ட தாரிகளின் நியமனங்கள் குறித்து வடக்கு மாகாண முதலமைச்சர் ஜனாதிபதிக்கு அவ சர விண்ணப்பக் கடிதம் ஒன்றினை அனுப்ப வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத் தார்.
தொடர்ந்து அமைச்சர் டெனிஸ்வரன் இனப்பிரச்சினை குறித்து சபையில் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றி ஜனாதிபதியிடம் கோரி க்கையினை முன்வைப்பது நல்லது எனக் கூறினார்.
இதன் பின்பு எழுந்த உறுப்பினர் சஜயந் தன் எப்போதும் பிரேரணைககள் நிறைவேற் றுவது நல்லதல்ல எனவும் மாகாணசபைக் குள் இருக்கின்ற 37 விடயங்களை பட்டதாரிக ளை உள்ளடக்ககப் படவேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
தனியே பிரேரணைகள் நிறைவெற்றுவ தால் ஒன்றும் நடந்துவிடப்போவதில்லை எமது பிரேரணைகள் ஏற்றுக்கொள்ளப்பட வில்லை என்பதற்கு ஐ.நா அறிக்கை சிறந்த உதாரணமாகும்.
நாம் இன அழிப்பு எனக் கூறினோம் அவர்கள் இதனைப்பற்றி குறிப் பிடவில்லை எனக்கூறினார்.
இதன் பின்பு எழுந்த எதிர்க்கட்சித் தலைவர் தவராசா வெளிநாட்டு முதலீட்டாளர்களி னைக் கொண்டு இங்கு வேலைவாய்ப்புக் களை ஏற்படுத்த முதலமைச்சர் முயற்சிக்க வேண்டும் எனவும் கூறினார்.
வடக்கு மாகாணசபையின் அமைச்சரவை திறம்பட இயங்குவதாகவும் வேலைவாய்ப்புக் களை வழங்கி வருவதாகவும் சுகாதார அமை ச்சர் கூற மோதல் ஆரம்பமானது.
இதன்போது அமைச்சரவை தனது முடிவு களினை வெளிப்படுத்தவில்லை எனவும், சர்வதிகாரமாக செயற்படுகின்றது எனவும் அவைத் தலைவர் சிவஞானம் அமைச்சரவை மீது பகிரங்கமாக கூற்றம்சாட்டினார்.
இதன் பின்னர் முதலமைச்சரின் விசேட உதவியாளர் கூறித்து உறுப்பினர் பரஞ்சோதி யால் கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு இதுதொடர்பில் பொதுவெளியில் ஆராயப்படுவதனால் அவற்றின் கேள்விக ளும் பதில்களும் இராஜதந்திர ரீதியில் பாதிப்பை ஏற்படுத்தும் ஆகையினால் இதற்குரிய பதில் உரிய நேரத்தில் கூறப்டும் என் முதலமைச்சர் பதிலளித்தார்.
எனினும் தனக்கு பதில் வேண்டும் என் விடப்பிடயாக பரஞ்சோதி நிற்க அதற்கு அவைத் தலைவரும் ஆதரவு வழங்கினார்.
எனும் முதலமைச்சர் தனது நிலைப்பாட் டிலிருந்து மாற்றமடையாமல் பதில் கூற மறுத்து விட்டார்.

இதன் போது உறுப்பினர்கள் சர்வேஸ் வரன், நான் அமைச்சர்களிடம் கேள்வி கேட் கும் போது முன் அனுமதி பெறவேண்டும் ஆனால் முதலமைச்சரிடம் கேள்வி கேட்கும் போது மட்டும் முன்அனுமதி பெறத் தேவையி ல்லை என்பது எந்த வகையில் நியாயம் அவைத்தலைவர் தனது பதவிக்கு ஏற்றாப் போல் செயற்படவேண்டும் என ஒழுங்குப் பிரச்சினையை ஏற்படுத்தினார்.
இதன் பின்னர் அவைத்தலைவர் அமை தியாக மோதல்கள் தணிந்தது. எனினும் அமைச்சர் ஐக்கநேரன் பரஞ்சோதியினைப் பார்த்து இவர் எவ்விட ஆதரவின்றி யாரோ ஒருவரின் ஊதுகுழலாக செயற்படுகின்றார் என் குற்றஞ்சாட்ட மீண்டும் மோதல் வெடித்தது.
என்னை இவர் அவமதித்து விட்டார் என் உரத்த குரலில் பரஞ்சோதி சத்தமிட இதற்கு விந்தனும் ஆதரவளித்தார்.
பின்பு மதியநேரத்தை அண்மித்ததும் மோதல்கள் தானாக தணிந்தது.
விக்னேஸ்வரனிற்கு எதிராக செயற்படுவதற்கு அன்மையில் கொழும்பு சென்ற பரஞ்சோதிக்கு பல லட்சம் பணம் ரணில் அரசால் இவரிடம் வழங்கப்பட்டதுடன் வட மாகாண சபையைக் குழப்பும் பணிகள் பரஞ்சோதி தலைமையில் ஒழுங்கைமைக்கப் பட்டுள்ளதுடன் இக் குழுவில் சீ.வி.கே.சிவஞ்ஞானம் சயந்தன் சுகிர்தன் அஸ்மீன் ஆர்னோல்ட் மற்றும் விந்தனும் இக் குழுவில் உள்ளடங்குகின்றனர்.
இவர்களுக்கான அனைத்து கட்ளைகளும் கொழும்பிலிருந்து வருவதுடன் கூட்டமைப்பின் வடக்கு மாகாண சபை சர்வதேசத்தில் பாரிய சிக்கலாக உள்ளது அதனைத் தவிர்க்கும் வகையில் இவற்றை செயற்படுத்துவதாகவும் வெகு விரைவில் வடக்கு முதல் கதிரையை காலியாக்கி விடுவதற்கான அனைத்து வேலைகளும் முடிவாகி விடும் எனம் உறுதிப் படுத்தியுள்ளதாக எமது புலனாய்வுச் செய்தியாளர் லசந்த கலபதி அனுப்பி வைத்துள்ள செய்திக் குறிப்பில் சுட்டிக் காட்டியுள்ளார்.


Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila