வெவ்வேறு அளவீட்டுக் கருவிகளை பயன்படுத்த வேண்டும்


தமிழ் மக்களின் வாழ்வியலைப் பொறுத்த வரை அவர்களின் உரிமைக்கான அகிம்சைப் போராட்டம் என்பது ஒருபோதும் ஓயப்போவ தில்லை என்று அறுதியிட்டுக் கூறமுடியும்.

இவ்வாறு கூறுவதற்குக் காரணம் இலங்கை ஆட்சியாளர்கள் தமிழ் மக்களுக்கான உரிமை களை, அதிகாரங்களை மனப்பூர்வமாக வழங்க மாட்டார்கள் என்பதுதான்.
ஆகையால் இலங்கை அரசுகளிடம் இரு ந்து எதைப்பெறுவதாக இருந்தாலும் அதற் காக 

அகிம்சைப் போராட்டத்தை நடத்துவது தவிர்க்க முடியாததாகிவிட்டது.
இதில் ஒன்றுதான் நேற்று முன்தினம் வடக்கு மாகாணத்தில் நடைபெற்ற பூரண ஹர்த்தாலாகும்.

தமிழ் அரசியல் கைதிகளின் விடயத்தில் அரசாங்கம் கொண்டிருக்கக்கூடிய மெத்தனப் போக்கு கைதிகளின் உயிருக்கும் வாழ்வுக்கும் ஆபத்தாகி வருகிறது.

எனவே இது விடயத்தில் தமிழ் மக்கள் தங்களின் மனநிலையை வெளிப்படுத்தியுள்ள னர். இதற்கு ஆட்சியாளர்கள் உரியமதிப்பை அளிப்பார்களா? என்பதற்கு காலம்தான் பதிலளிக்க வேண்டும்.

எனினும் உலக நாடுகளின் அவதானத்தில் தமிழ் அரசியல் கைதிகளின் விடயம் முதன் மைப் பட்டியலில் சேர்க்கப்படும் என்பதை மட்டுமே நாம் இங்கு கூறிக்கொள்ளலாம்.

இவை ஒருபுறம் இருக்க, நாம் முன்னெடுக்கும் போராட்டம் என்பதும் பொருத்தப்பாடாகவும் ஏற்புடையதாகவும் அமைவதை உறுதிசெய்வதும் தமிழ் சமூகத்தின் தலையாய கடமையாகும்.

அவ்வாறான பொருத்தப்பாட்டுக்கு நாம் இடம்கொடுக்காவிட்டால், அதன்விளைவு எதி ரானதாக அமைவதுடன் அத்தகைய போராட்டங்களை மக்கள் நிராகரிக்கத் தொடங்குவர்.
அதேவேளை போராட்ட முறைமைகள் தொடர்பிலும் கவனம் செலுத்துவது கட்டாய மானதாகும். 

ஒரே அளவீட்டுக் கருவி கொண்டு எல்லாப் பொருட்களினதும் அளவீடுகளைச் செய்வது எந்தளவுக்கு பொருத்தம் இல்லையோ அதே போன்று ஒரு போராட்ட வழிமுறையை எல்லா வற்றுக்கும் பிரயோகிப்பதும் பொருத்தமற்றதாகும்.

எனவே நடைபெறும் நிகழ்வு, நிகழ்வின் ஏற் பாட்டாளர்கள், அதன் பற்றுநர்கள், விருந்தினர் களாகக் கலந்து கொள்பவர்கள், அந்த நிகழ்வால் நம் தமிழ் சமூகத்துக்கு கிடைக்கக்கூடிய சாதக பாதகத் தன்மைகள் எனப் பல விடயங்களையும் ஆய்ந்தறிந்து போராட்ட வழிமுறை களைத் தெரிவு செய்ய வேண்டும்.

சில இடங்களில் எதிர்ப்புக்குரியவரை வர வேற்று ஆதரவு தெரிவித்து நம் இலக்கை நிறைவேற்றுவது கூட ஒரு வகையான போரா ட்ட தந்திரோபாயம் எனலாம்.
இதுதவிர, ஒரு போராட்ட வழிமுறைகளை நாம் மேற்கொள்ளும்போது அது எதிரான விளைவைத் தந்துவிடாமல் பார்த்துக் கொள்வதும் கட்டாயமானதாகும்.

அதாவது முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜ பக்­வுக்குக் காட்ட முடியாத போராட்டத்தை ஜனாதிபதி மைத்திரிக்கு காட்ட முற்படும்போது அது போராட்டம் நடத்தும் இனக் குழுமத்துக் குள்ளேயே விமர்சனத்தை ஏற்படுத்தும் என்பதுடன் சம்பந்தப்பட்ட தலைவரும் நமக்கு எதி ரான சில தீர்மானங்களை எடுத்துவிடலாம்.
எனவே இது விடயத்திலும் கவனம் செலு த்தி போராட்ட அடையாளங்களைச் சரிபார்த்து அதனை நமக்குச் சாதகமாக்குவது மிக மிக அவசியமாகும். 
Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila