குருசேத்திரப் போரில் கர்ணனிடம் இருந்த பலமான ஒரே ஆயுதம் நாகாஸ்திரம்.
நாகாஸ்திரத்தை ஏவினால் குருசேத்திர களத்தில் இருந்து பாண்டவர் சேனை மீண்டு வருவது கடினம் என்பது கிருஷ்ண பரமாத்மா வுக்கு நன்கு தெரியும்.
இதனாலேயே போருக்கு முன்பாக குந்தி தேவியை கர்ணனிடம் அனுப்பி நாகாஸ் திரத்தை ஒரு தடவையன்றி மறுதடவை ஏவக் கூடாது என வரம் கேட்கப்பட்டது.
கொடுத்த வரத்தைக் காப்பாற்றும் கர்ணன் குருசேத்திரப் போரில் நாகாஸ்திரத்தை ஒரு தடவை மட்டும் ஏவ,
போர்ச்சூழ்ச்சி தெரிந்த பார்த்தசாரதி தேரை நிலத்திடை அமிழ்த்தி நாகாஸ்திரத்தில் இரு ந்து பாண்டவரைக் காப்பாற்றிக் கொண்டான்.
மீண்டும் நாகாஸ்திரத்தை ஏவினால் கர்ண னுக்கு வெற்றி என்ற நிலைமை இருந்ததா யினும் கொடுத்த வரத்தைக் காப்பாற்ற அதனை அவன் செய்யாதிருந்தான்.
கொடுத்த வரத்தைக் காப்பாற்றுவதே தனது அறம் என்று கர்ணன் உறுதியாக இருந்ததால் தான் அவனுக்குத் தோல்வி ஏற்பட்டதேயன்றி நாகாஸ்திரத்தின் தரக்குறைவால் கர்ணன் தோற்றானல்ல.
ஆக, நாகாஸ்திரம் என்பது மிகப்பலம் பொருந் திய ஆயுதம். அதிலிருந்து எவரும் தப்பித்துக் கொள்ள முடியாது.
அட, இப்படியயாரு ஆயுதம் தமிழ் மக்களா கிய எங்களிடம் இருந்திருந்தால்… என்று கற் பனைப்புலம் வேலை செய்கிறது.
விடுதலைப் போராட்டம் நடந்த காலத்தில் இரு தரப்பும் பயன்படுத்திய எத்தனையோ ஆயுதங் கள் பற்றித் தகவல்கள் வெளியாகியிருந்தன.
ஆனால் இன்று அவை அனைத்தும் களத் தில் இருந்து மறைவு பெற்றுள்ளன.
விடுதலைப் போராட்டம் தமிழ் மக்களுக்குத் தோல்வியாயிற்று. கூட இருந்தவர்களும் சர்வ தேச சமூகமும் சேர்ந்து தமிழ் மக்களை வஞ் சித்து விட்டதனால் இன்று தமிழ் மக்கள் நடுத் தெருவில் நிற்க வேண்டியதாயிற்று.
நிலைமை இதுவாக இருக்க, தமிழ் மக் களின் வாக்கின் மூலம் அரசியல் பதவி பெற்று சலுகைகளை அனுபவிக்கும் தமிழ் அரசியல் வாதிகள் கூட,
தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தை – அதற்கான தியாகத்தைக் கொச்சைப்படுத்து கின்றனர்.
இந்நிலையில்தான் நாகாஸ்திரம் எங்களி டம் இருந்தால் என்று நினைக்கத் தோன்று கிறது.
இந்த நினைப்பில் இருந்து எங்களிடம் நாகாஸ்திரம் இருக்கிறது. அதுதான் தமிழ் மக்களின் வாக்குகள் என்பதாக ஒரு செய்தி எழுகிறது.
ஆம், தமிழ் மக்களிடம் இப்போது இருக் கின்ற ஒரேயயாரு பலமான ஆயுதம் வாக்கு எனும் நாகாஸ்திரம்தான்.
அந்த நாகாஸ்திரத்தை தமிழ் மக்கள் சரி யாக – குறி தவறாமல் ஏவுவார்களாக இருந் தால், தமிழ் மக்கள் தாங்கள் யார் என்பதை நிரூபித்துக் காட்டிவிடுவார்கள்.
எனவே அரச சுகபோகம் தவிர்த்து தமிழ் மக்களுக்காக குரல் கொடுப்போம்.
அதனூடு உரிமைகளை வென்றெடுப்போம் என்ற உறுதியை தமிழ் அரசியல்வாதிகள் எடுத்துக் கொள்வர்.
ஆகையால் வரப்போகும் தேர்தலில் தமிழ் மக்களின் வாக்குகள் நாகாஸ்திரமாக அமை யும் என்பது உறுதி