தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு துரோகமிழைக்கிறது என அதிலிருந்து வெளியேறிய கட்சிகள் இணைந்து அதிலும் மோசமான கொள்கைகளையுடைய தமிழர்விடுதலைக் கூட்டணியுடன் கூட்டுவைத்து அக்கட்சியின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவதனை எந்த கொள்கைகளின் அடிப்படையில் ஏற்றுக்கொள்ள முடியும் எனக் கேள்வியெழுப்பியுள்ளார் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்.
சைக்கிள் சின்னத்தில் போராட்டியிடுவதுதான் ஈபிஆர்எல்எவ் இற்குப் பிரச்சனை எனில் ஈபிஆர்எல்எவ் இன் சின்னத்திலும் இணைந்து போட்டியிட தாங்கள் தயாராக இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
புதிய கூட்டொன்று தொடர்பாக பேசப்படுகையில் தமிழர் விடுதலைக்கூட்டணி பெயர்,சின்னத்தை பயன்படுத்த சுரேஸ் விருப்பங்கொண்டுள்ளார்.இது சர்ச்சையினை தோற்றுவித்துள்ள நிலையில் கஜேந்திரகுமாரின் கருத்து வெளியாகியுள்ளது.
எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலில் பொது அமைப்புக்களுடன் இணைந்து பதிய அரசியல் கூட்டணி ஒன்று அமைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டுவருகிறது.
இந்நிலையில் புதிய அரசியல் கூட்டணி குறித்து பல்வேறு முரண்பட்ட கருத்துக்களும் பரப்பப்பட்டுவரும் நிலையில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்