இலங்கை போக்குவரத்து சபை யின் வடபிராந்திய சாலை ஊழியர் களால் முன்னெடுக்கப்பட்ட பணிப் புறக்கணிப்பு போராட்டம் நேற்று நண்பகலுடன் முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளதுடன் போக்குவரத்து சேவைகள் வழமைக்கு திரும்பியுள்ளன.
இலங்கைப் போக்குவரத்துச் சபையின், வடபிராந்திய பிரதான முகாமையாளர் உபாலி கிரிவத்து டுவ மற்றும் பாதுகாப்பு அதிகாரி ஆகியோரை வடக்கிலிருந்து உடன் இடமாற்றவேண்டும் என்ற கோரிக் கையை முன்வைத்து, இலங்கை போக்குவரத்துச் சபையின் வடபிரா ந்திய சாலைகளின் ஒன்றிணைந்த தொழிற்சங்கத்தால் கடந்த திங் கட்கிழமை முதல், பணிப்புறக்கணிப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இது தொடர்பாக பல பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று தோல்வியில் முடிவடைந்த கார ணத்தினால் போராட்டம் தொடர்ச்சியாக இடம் பெற்றது.
இந்த நிலையில்,தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலை வரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சம்பந்தன் உட்பட வடக்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் போக்குவரத்துச் சபை யின் தலைவருடன் நேற்று காலை பேச்சு வார்த்தை நடத்தியிருந்தனர்.
அதில் இலங்கைப் போக்குவரத்துச் சபை யின் வடபிராந்திய பிரதான முகாமையாளர் உபாலி கிரிவத்துடுவவை அந்தப் பதவியிலி ருந்து உடனடியாக இடம்மாற்றம் செய்வதாக வும், ஏற்கெனவே செயலாற்று முகாமையா ளராக இருந்த வடபிராந்திய பிரதான முகா மையாளராக கந்தசாமி கேதீஸன் தற்காலி கமாக நியமிக்கப்படுவார் என இலங்கைப் போக்குவரத்துச் சபையின் தலைமையகம்; வாக்குறுதி வழங்கியது.
அதனடிப்படையில் தமது போராட்டத்தை நிறுத்தியுள்ளதாக வடபிராந்திய போக்குவர த்துச் சபையின் வடபிராந்திய சாலைகளின் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.
அத்துடன் தமது போராட்டத்துக்கு ஆத ரவு தெரிவித்தும் ஒத்துழைப்பு வழங்கி வெற் றியடைய வைத்த அனைவருக்கும் தமது நன்றிகளை தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக வடக்கு மாகாண முதலமை ச்சர் சி.வி.விக்னேஸ்வரன், அமைச்சர்க ளான விஜயகலா மகேஸ்வரன், றிசாட் பதியு தீன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் டக் ளஸ் தேவானந்தா, வடக்கு பாராளுமன்ற உறுப்பினர்கள், போக்குவரத்து ஊழியர்கள் பல்கலை சமூகத்தினர், அதிபர் ஆசிரியர் சங் கத்தினர் உட்பட அனைவருக்கும் தமது நன் றிகளை தெரிவித்துள்ளனர்.