சிறீலங்கா சுதந்திரக்கட்சியிலும் புலிகளாம்!


slap

தேசியக்கட்சிகளை புறக்கணிக்க தமிழரசுக்கட்சி அழைப்புவிடுத்துள்ள நிலையில் மைத்திரியின் சிறீPலங்கா சுதந்திரக் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபன வெளியீட்டில் “நித்திரையா தமிழா நீ நிமிர்ந்து பாரடா” என்ற தமிழீழ விடுதலைப் புலிகளின் பாடல் ஒலிக்கவிடப்பட்டு பிரச்சாரம் தொடங்கப்பட்டுள்ளது.

சிறீPலங்கா சுதந்திரக் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபன வெளியீட்டு நிகழ்வு இன்று (12) காலை யாழ் நகரிலுள்ள “பிள்ளாயார் இன்” விருந்தினர் தங்ககத்தில் நடைபெற்றது. அங்கு நிகழ்வு ஆரம்பிப்பதற்கு முன்பதாக ஒலிபெருக்கியில் பாடல்கள் ஒலிபரப்பப்பட்டன.
slap2
அதன்போது தமிழீழ விடுதலைப் புலிகளின் எழுச்சிப் பாடலான “நித்திரையா தமிழா நீ நிமிர்ந்து பாரடா” என்ற எழுச்சிப்பாடல் ஒலிபரப்பப்பட்டது. இப்பாடலில் சிறீPலங்கா அரசாங்கத்தையும் இராணுவத்தையும் கடுமையாக விமர்சிக்கும் “
அப்பு ஆச்சியர் வாழ்ந்த பூமியிப் பூமிதானடா
அப்புகாமியை ஆளயிங்கு விட்டதாரடா
இனிமேல் தமிழன் பணியானென்று உரத்துக் கூறடா”
போன்ற வரிகள் அடக்கியிருக்கின்ற நிலையில் குறித்த பாடல் ஜனாதிபதியின் கட்சியின் நிகழ்வில் ஒலிக்கவிடப்பட்டமை மக்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila