கொழும்புக்கு திருப்பி அழைக்கப்பட்ட பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவிற்கு பாதுகாப்பு அமைச்சின் தலைமையகத்தில் புதிய நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
இன்றைய தினம் வெளிவிவகார அமைச்சிற்கு அழைக்கப்பட்ட அவரிற்கு புதிய கடமை பற்றி அறியத்தரப்பட்டிருந்தது.
இராணுவ தளபதியின் பணிப்புரைக்கு அமைய பிரிகேடியர் இன்றைய தினம் வெளிவிவகார அமைச்சிற்கு சென்றிருந்தார்.
இதனிடையே இலங்கை திரும்பிய பிரியங்க சிங்கள தேசத்தின் புதிய கதாநாயகனாக்கப்பட்டுள்ளார்.அவருடன் குழப்புகைப்படமெடுப்பதிலும் செல்பி எடுப்பதிலும் சிறீலங்கன் விமான பணிப்பெண்கள் ஆர்வம் காட்டிய புகைப்படங்கள் வெளிவந்துள்ளன.