மாகாணசபை தேர்தலில் தேர்தல் சட்டத்தில் புதிய திருத்தங்கள்

மாகாணசபை தேர்தலுக்கு முன்னதாக விருப்பு வாக்குமுறையை நீக்கி, தேர்தல் சட்டத்தில் புதிய திருத்தங்களை மேற்கொள்ள ஜனாதிபதி திட்டமிட்டுள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
தாருஸ்ஸலாமில் நடைபெற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றவர்களுக்கான ஒன்றுகூடல் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
இதன்போது அவர் மேலும் உரையாற்றுகையில், “ஜனாதிபதியை சந்தித்து சமகால அரசியல் கலநிலவரம் குறித்து பேசினோம். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அணி உள்ளூராட்சி மன்ற தேர்தலில் அபார வெற்றிபெற்றுள்ள நிலையில், தேசிய அரசியலில் ஆட்சிமாற்றம் குறித்து இதன்போது பேசப்பட்டது. எனினும் ஆட்சி மாற்றம் தொடர்பில் ஜனாதிபதியும் பிரதமரும் மேற்கொண்ட பேச்சுவார்த்தைகளில் இணக்கம் காணப்படவில்லை.
புதிய தேர்தல் முறையினால் தொடர்ந்து வெற்றிபெற்றுவந்த இடங்களில் தங்களது கட்சி தோல்வியை சந்தித்துள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார். மாகாண சபை தேர்தலிலும் இந்த முறை தொடர்ந்தால் பெரும் சிக்கல்கள் ஏற்படும் என்பதை ஜனாதிபதிக்கு நான் தெளிவுபடுத்தினேன்’ என கூறினார்.

Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila