பெரியபொக்கணையில் கசிப்பு உற்பத்தி தாரளம்: பொலிஸார் கண்டு கொள்ளாத நிலை



புத்தூர் பெரியபொக்கணை பகுதியில் கசிப்பு உற்பத்தி தாரளமாக நடைபெறுவதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பில் அச்சுவேலி பொலிஸார் கண்டும் காணதும் நடந்து கொள்வதாக தெரிவிக்கப்படுகிறது. பெரிய பொக்கணை பகுதியில் உள்ள ஒரு சிலரே இவ்வாறு கசிப்பு உற்பத்தி நடவடிக்கையில் ஈடுபடுவதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த காலங்களில் பொலிஸ் பொறுப்பதிகாரிகள் திறமையாக செயற்பட்டு பெரிய பொக்ணை பகுதியில் கசிப்பு உற்பத்தியினை கட்டுப்படுத்தியிருந்த போதும் தற்போது பொலிஸார் பிரதேசத்திற்குள் வருவதில்லை என குற்றச் சாட்டு ஒன்று முன்வைக்கப்படுகிறது.
இதனால் கசிப்பு உற்பத்தி நடவடிக்கையில் ஈடுபடும் சிலர் அருகில் உள்ள பற்றைகள் மற்றும் வீடுகளில் கசிப்பு உற்பத்தியினை தாரளமாக மேற்கொண்டு வருகின்றனர். இச் செயற்பாடு காரணமாக குடும்ப வன்முறை பிள்ளைகளின் கல்விப்பாதிப்பு என்பன இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பில் பொலிஸார் ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுக்கவேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்படுகிறது.
Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila